காதல் திருமணம் செய்த கணவர் தற்கொலை .

கோவை மே 6 கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர், அன்பு நகரை சேர்ந்தவர் விஜய் பிரசாத் (வயது 24) அதே பகுதியை சேர்ந்தவர் யாஸ்மின் பானு ( வயது 24) இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர் .விஜய் பிரசாத் குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன் -மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் யாஸ்மின் பானு விஜய் பிரகாசிடம் பேசாமல் இருந்தாராம். இதனால் மனம் உடைந்த விஜய் பிரசாத் நேற்று வீட்டில் தூக்கில் தொங்கினார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார் .இது குறித்து பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.