கோவையில் தொடர் குற்றச் செயலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது ..!!

கோவை சிங்காநல்லூர் நீலி கோணாம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்சுந்தர் என்கிற மோனி(வயது 22). இவர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது அடிதடி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவர் தொடர் குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால் சிங்காநல்லூர் போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனுக்கு பரிந்துரை செய்தனர். இதனை தொடர்ந்து தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட மோகன்சுந்தரத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். இதற்கான உத்தரவு நகலை சிங்காநல்லூர் போலீசார் கோவை சிறை அதிகாரிகளிடம் அளித்தனர்.