கோவை: உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அங்கடு (வயது 38 )இவர் ஈச்சனாரி கணேசபுரத்தில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று இவர் குனியமுத்தூர் சுண்டக்காமுத்தூர் ரோடு குளக்கரையில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்து 2 ஆசாமிகள் இவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ 5 ஆயிரம் பணம், செல்போன் ஆகியவற்றை பறித்தனர். பின்னர் இவரை தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து அங்கடு குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்..
வடமாநில தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போன் பறிப்பு ..!
