85 வயது மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை..

கோவை மாவட்டம் சிறுமுகை பக்கம் உள்ள ஜடையம்பாளையம், மாதனூரை சேர்ந்தவர் செந்தூர் பாண்டி .இவர் இறந்து விட்டார். இவரது மனைவி கனியம்மாள் (வயது 85) இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கீழே தவறி விழுந்து வலதுகாலில் முறிவு ஏற்பட்டது.இதிலிருந்து உடல் நலம் பாதிக்கப்பட்டார்.இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கனியம்மாள் நேற்று அவரது வீட்டின் ஜன்னல் கம்பியில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது மகன் ராஜசேகர் சிறுமுகை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சித்ரா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.