நள்ளிரவில் கோவை டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு..!

கோவைஆவாரம் பாளையம் ரோட்டில் டாஸ்மாக் கடை (எண் 1615) உள்ளது.நேற்று முன்தினம் இரவில் யாரோ கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 62 மது பாட்டில்களை திருடி சென்று விட்டனர் . இதன் மதிப்பு ரூபாய் 10 ஆயிரத்து 400 இருக்கும் . இதுகுறித்து கடை சூப்பர்வைசர் சஞ்சய் காந்தி (வயது 43) ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..