திமுகவில் இருந்து 8 நிர்வாகிகள் அதிரடி நீக்கம்: பொது செயலாளர் துரைமுருகன் நடவடிக்கை.!!

சென்னை: கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திமுக நிர்வாகிகள் 8 பேரை நீக்கி பொது செயலாளர் துரைமுருகன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

திமுக பொது செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் சின்னசேலம் பேரூர் திமுக செயலாளர் எஸ்.கே.செந்தில்குமார், தர்மபுரி கிழக்கு மாவட்டம், பொ.மல்லாபுரம் பேரூர் செயலாளர் உதயகுமார், பேரூராட்சி முன்னாள் தலைவர் புஷ்பராஜ் மற்றும் பொ.மல்லாபுரம் பேரூரைச் சேர்ந்த ஆனந்தன், ரகுமான்ஷான், மோகன்குமார்; தஞ்சை வடக்கு மாவட்டம், வேப்பத்தூர் பேரூர்க் கழக துணைச் செயலாளர் இராமச்சந்திரன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் இரா.இராஜ துரை ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்குஅவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (சஸ்பெண்ட்) வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.