பெண் போலீசை தாக்கி விட்டு தப்பி ஓடிய கஞ்சா வியாபாரி கைது..!

கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பெண் போலீசாக வேலை பார்த்து வருபவர் சுகன்யா. இவர் ராமநாதபுரம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் இன்ஸ்பெக்டர் பிரபா தேவி தலைமையில் ரோந்து சென்றார். அப்போது 3 பேர் போலீசை கண்டதும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அதில் ஒரு பெண்ணை பிடிக்க முயன்றபோது அந்த பெண் போலீஸ் சுகன்யாவை பிடித்து கீழே தள்ளி விட்டு தப்பினார்.இதில் பெண் போலீஸ் சுகன்யா காயமடைந்தார். அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்த்தனர்.தப்பி ஓடிய பெண்ணை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர் ரத்தினபுரி, கண்ணப்பன் நகரை சேர்ந்த கஞ்சா வியாபாரி முபினா ( வயது 38)என்பது தெரிய வந்தது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.