கோவையில் இன்று 5 -வது போலீஸ் கமிஷன் கூட்டம்..!

கோவை : தமிழ்நாடு காவல் துறையின் 5-வது போலீஸ் கமிஷன்கூட்டம் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் இன்று நடந்தது.தமிழ்நாடு காவல்துறை கூடுதல் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்,ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி செல்வம், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் , தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன்(ஒய்வு) ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். அவர்களுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன்,கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார்,மாநகராட்சி ஆணையர் பிரசாந்த்,மேற்கு மண்டல போலீஸ் ஐ,ஜி. பவானீஸ்வரி, கோவை சரக டி.ஐ. ஜி சரவண சுந்தர் மற்றும் திருப்பூர், ஈரோடு, சேலம் தர்மபுரி நீலகிரி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்கள், துணை போலீஸ் கமிஷனர்கள் போலீஸ் சூப்பிரண்டுகள் பங்கேற்றனர்.