கோவையில் பைக் மீது 4 சக்கர வாகனம் மோதி தொழிலாளி பரிதாப பலி..

கோவை:பொள்ளாச்சி, குமரன் நகர், ரங்கசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 55) .கூலி தொழிலாளி. இவர் நேற்று காட்டம்பட்டியில் நடந்த ஒரு திருமணம் விழாவுக்கு சென்று விட்டு பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். தாசநாயக்கன்பாளையம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத 4 சக்கர வாகனம் இவரது பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது .இதில் பைக் ஓட்டி வந்த பாலகிருஷ்ணன் படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார். இது குறித்து நெகமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற 4 சக்கர வாகனத்தை தேடி வருகிறார்கள்.