பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு – பைக் ஆசாமிகள் கைவரிசை..!

கோவை வெரைட்டி ஹால்ரோடு ‘வெங்கட் ராமர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் இறந்து விட்டார். இவரது மனைவி சுமங்கல தேவி ( வயது 58) டெய்லர். இவர்
நேற்று சுக்கிரவார்பேட்டை ரோட்டில் நடந்து சென்றார். அப்போது பைக்கில் 2 ஆசாமிகள் வந்தனர். அவர்களில் பின்னால் இருந்த ஆசாமி கீழே இறங்கி வந்து அவரது கழுத்தில் நடந்த 4 பவுன் செயினை பறித்தான். பின்னர் இருவரும் பைக்கில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து சுமங்கல தேவி வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கில் தப்பிய அந்த ஆசாமிளை தேடி வருகிறார்கள்..