கோவை அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் இருப்பதாக கூறி பெண்களின் போட்டோவை அனுப்பி வாலிபர்களிடம் பணம் மோசடி- பெண் உட்பட 4 பேர் கைது..!

கோவை அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் இருப்பதாக கூறி வாலிபர்களிடம் பணம் மோசடி செய்த பெண் உட்பட 4 பேர் கைது.

கோவை : கோவை சவுரி பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ( அப்பார்ட்மெண்ட்) உள்ளது இந்த குடியிருப்புக்கு சில நாட்களுக்கு முன்பு வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அங்கிருந்த காவலாளியிடம் தங்களது செல்போனில் உள்ள சில பெண்களின் போட்டோக்களை காட்டினார்கள். அவர்கள் இங்கு தங்கி இருக்கும் வீட்டை காட்டுங்கள் என்று கூறியுள்ளனர் .அதை பார்த்த காவலாளி இந்த படத்தில் உள்ளவர்கள் யாரும் இந்த குடியிருப்பில் இல்லை. என்று கூறினார். அந்த வாலிபர்கள் எங்களுக்கு சமூக வலைதள மூலம் புகைப்படத்தை அனுப்பிய ஒரு பெண் தான் இங்கே தங்கி இருப்பதாகவும் ஆன்லைன் மூலமாக பணம் அனுப்பினால் ஜாலியாக உல்லாசம் அனுபவிக்கலாம் எனக் கூறியதாகவும் அதனை நம்பி நாங்கள் பணத்தை அனுப்பி வைத்தோம் என்றனர் ..இதுகுறித்து காவலாளி குடியிருப்பு மேற்பார்வையாளருக்கு தகவல் கொடுத்தார்.இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் . அடுக்குமாடி குடியிருப்பில் அழகிகள் இருப்பதாக கூறி வாலிபர்களிடம் பணம் மோசடி செய்தது தொடர்பாக மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சுபாஷ் சந்தர் ( வயது 24 )மற்றும் கோவையை சேர்ந்த 17 வயது சிறுவன், ஆகியோரை கைது செய்தனர் .அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் கன்னியாகுமரியை சேர்ந்த ஆர்த்தி ( வயது 24) என்ற பெண்ணையும் கரூரை சேர்ந்த குமாரவேல் (வயது25) என்பவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.