கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம் பாளையம்- கணுவாய் ரோட்டில் வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தார் .அவர்களிடம் மொத்தம் 1350 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வடவள்ளி இடையர்பாளையம் ரோட்டில் உள்ள லட்சுமி நகரைசேர்ந்த பிரகாஷ் என்ற கைக்கட்டு (வயது 53) நரசிம்மநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள பூச்சியூர் முருகன் நகரை சேர்ந்த சுப்பிரமணி (வயது38) ஆகியோர் கைது செய்யப்பட்டனர் .இருவரும் டிரைவர்கள் ஆவார்கள். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Leave a Reply