வாயில் வாகனங்களின் ஒலி… கோவை இளைஞரின் அசத்தல் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல்..!

கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் .இவர் சி.எஸ்.ஐ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்துள்ளார் . இவர் பள்ளியில் படிக்கும் போதே மோட்டார் வாகனம் மீது அதிகமான ஆர்வம் கொண்டவர்.

இவருக்கு இரு சக்கர வாகனம் வாங்க முடியவில்லை என்றாலும் இவரது வாயில் மூலமாக பந்தயத்தில் கலந்து கொள்ளும் இரு சக்கன வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சவுண்டுகளை தத்ரூபமாக ஒலி எழுப்பி சாதனை படைக்கிறார். இவரை பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர் . இவருக்கு இரு சக்கர பந்தயங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் பங்கு பெறுவேன் என தெரிவித்துள்ளார்..