வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம் பெண் உள்பட 3 பேர் கைது – 2 அழகிகள் மீட்பு ..!

வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம் பெண் உள்பட 3 பேர் கைது – 2 அழகிகள் மீட்பு ..! கோவை சரவணம்பட்டி எப். சி .ஐ. ரோடு, ஏ. டி .ஆர் .நகரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் செல்ல மணி நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 3 அழகிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள்பெண்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.இதை நடத்தியதாக கணபதி விவேகானந்தர் வீதியை சேர்ந்த கண்ணன் என்ற சின்னப்பன் (வயது 42) கணபதி வி.ஜி. ராவ் நகரை சேர்ந்த சங்கரேஸ்வரி( வயது 33)கணபதி விவேகானந்தர் வீதியைச் சேர்ந்த கார்த்திக் ( வயது 23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.