பிரபல கஞ்சா வியாபாரிகள் 3 பேர் கைது..!

கோவை ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ,சப் இன்ஸ்பெக்டர் வசந்த் குமார் ஆகியோர் நேற்று மாலை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள மின் மயானம் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் மொத்தம் 1300 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கஞ்சாவும் ,கஞ்சா விற்ற பணமும் பறிமுதல் செய்யப்பட்டது .இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள் புலியகுளம், கருப்பராயர் கோவில் வீதியைச் சேர்ந்த சன் என்ற சண்முகம் ( வயது 26) பாப்பநாயக்கன்பாளையம், பாரதிபுரம் சரண்குமார் ( வயது 23) அம்மன் குளம் பாரதி நகர் மோசஸ் என்ற மோஸ் ( வயது 25 )என்பது தெரிய வந்தது .இவர்கள் 3 பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன .இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.