கோவை செங்கல் சூளையில் 260 கிலோ இரும்பு திருட்டு – 2 பேர் கைது.!

கோவை சின்ன தடாகம் ,வீரபாண்டி மெயின் ரோட்டில் உள்ள செங்கல் சூளையில் 130 கிலோ பழைய இரும்புகள் திருடப்பட்டன . இதன் மதிப்பு ரூ 2 லட்சம் இருக்கும் .இது குறித்து தடாகம் போலீசில் புகார் செய்யபட்டது. சப் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் வழக்கு பதிவு செய்து சின்ன தடாகம் குட்டை வழியை சேர்ந்த செல்வராஜ் (வயது 40) நித்யானந்தம் என்ற மனோஜ் (வயது 24) ஆகியோரை கைது செய்தார். இதே போல இவர்கள் இருவரும் அங்குள்ள மற்றொரு செங்கல் சூளையிலும் 130 கிலோ பழைய இரும்பு திருடி இருப்பது தெரிய வந்தது. இவர்களிடமிருந்து மொத்தம் 260 கிலோ இரும்பு பறிமுதல் செய்யப்பட்டது..