கோவை டாஸ்மாக் கடையை உடைத்து 209 மதுபாட்டில்கள் திருட்டு.!!

கோவை அருகே உள்ள இருகூர், மாணிக்கம் நகர், சின்னியம்பாளையம் ரோட்டில் டாஸ்மாக் கடை எண் (18 14 ) உள்ளது. தேர்தலுக்காக 3 நாள் டாஸ்மாக் கடை மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் கடையை திறக்கச் சென்றபோது முன் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்து 209 மதுபாட்டில்களை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.56 ஆயிரத்து 970 ஆகும். இதுகுறித்து கடை சூப்பர்வைசர் செந்தில்குமார் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் யூசுப் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..