கோவையில் கஞ்சா சாக்லெட் விற்ற வடமாநில தொழிலாளி குண்டர் சட்டத்தில் கைது..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லெட்டுகள் விற்பனை செய்ததாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி திலீப் குமார் ( வயது 38) என்பவரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்ற கலெக்டர் கிராந்தி குமார் பாடி அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இதையடுத்து திலீப்குமார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு நேற்று வழங்கப்பட்டது.