மாணவர்களுக்கு கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வடமாநில வாலிபர் கைது.!!

கோவை மாவட்டம் அன்னூர் -அவிநாசி ரோட்டில் உள்ள கஞ்சப்பள்ளி பகுதியில் ஒரு மறைவான இடத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் சோதனை செய்தார் . அவரிடம் 12 – 4 எடை கொண்ட 2,480 கஞ்சா சாக்லேட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் சேத்தி ( 30) என்பது தெரிய வந்தது. இவர் தற்போது சோமனூர் மில் ரோட்டில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி இருந்து கல்லூரி , பள்ளிக்கூடம் மாணவர்களுக்கு இந்த கஞ்சா சாகலெட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது . இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..