போக்சோ சட்டத்தின் கீழ் கைதான நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் கார்த்திக் மற்றும் முருகேசன் கடந்த 2019 ஆம் ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கார்த்திக் மற்றும் முருகேசன் என்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று குற்றவாளிகளுக்கு 20 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர்களுக்கு ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பாராட்டினார்.