எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது கார் மோதி 2 தொழிலாளிகள் பரிதாப பலி..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள இலுப்பநத்தம், புங்கம்பாளையத்தை சேர்ந்தவர் திருவேங்கட மூர்த்தி ( வயது 47 )தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் ( வயது 46 )இருவரும் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர் ..இவர்கள் 2 பேரும் நேற்று வேலை முடிந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அன்னூர் – சத்தி ரோட்டில்,மைல் கல் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அன்னூர், அல்லிக்காரன்பாளையத்தைச் சேர்ந்த தனேஷ் குமார் (வயது 45 ) என்பவர் கார் ஒட்டி வந்தார். அப்போது ஸ்கூட்டரை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் மீது கார் மோதியது. இதில் திருவேங்கட மூர்த்தி ,ராஜகோபால் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர் . 2 பேரையும் கோவில்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர்கள் இறந்துவிட்டனர். இது தொடர்பாக தனேஷ்குமார் மீது அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.