சூலூரில் திருநங்கைகள் 2 பேருக்கு அரிவாள் வெட்டு..!

கோவை அருகே உள்ள சூலூரைச் சேர்ந்த திருநங்கைகள் சைலஜா (வயது 22)யமுனா ( வயது 24)இவர்கள் இருவரும் இன்று காலையில் சூலூர் அருகே எல்.அன்ட் .டி .பைபாஸ் ரோட்டில் சிக்னல் அருகே நின்று கொண்டு வாகனங்களில் செல்பவரிடம் பணம் வாங்கிக் கொண்டிருந்தனர்..அப்போது அங்கு வந்த 3 பேருக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரமடைந்த அந்த 3பேரும் சேர்ந்து இவர்களை அரிவாளால் வெட்டினார்கள் .இதில் சைலஜாவுக்கு இடது பக்க கழுத்தில் வெட்டுக்காயம் விழுந்தது. யமுனாவுக்கு வலது பக்கம் மணிக்கட்டில் வெட்டுக்காயம் ஏற்பட்டது..இருவரும் சிகிச்சைக்காக சிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவத்திற்கு விரைந்து சென்று அரிவாளால் வெட்டிய கும்பலை தேடி வருகிறார்கள்..