பைக்கில் சென்ற வாலிபரிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைப்பு..!

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ,வி .ஆர். புரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ் குமார் இவரது மகன் தீபக் குமார் (வயது 21) நடன பள்ளியில் வேலை பார்த்து வருகிறார் இவர் நேற்று பைக்கில் தனது நண்பருடன் ஆர்.ஜி. புதூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை 2 பேர் வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டிஅவரிடம் இருந்து 1200 ரூபாயை கொள்ளை அடித்தனர் தீபக்குமாரும் அவரது நண்பரும் பொதுமக்கள் உதவியுடன் அந்த 2 ஆசாமியையும் மடக்கிப் பிடித்து பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர் .போலீசார் அவர்களை கைது செய்தனர் .விசாரணையில் அவர்கள் மதுரை சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த கிஷோர் குமார் ( வயது 22 )ராமநாதபுரம் மாவட்டம் .திருவாடனை சேர்ந்த ஐயப்பன் ( வயது 23) என்பது தெரியவந்தது.. இவர்களிடமிருந்து பணம் அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன..