கோவையில் ஒரே நாளில் சாலை விபத்தில் 2 பேர் பரிதாப பலி..

கோவை திருச்சி ரோட்டில் உள்ள ஹைவேஸ் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் கார்த்திக் (வயது 25) இவர் நேற்று நீலாம்பூரில் ரோட்டை கடந்தாராம். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு 4 சக்கர வாகனம் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது .இதில் கார்த்திக் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார் .இது குறித்து தாயார் ராஜேஸ்வரி சூலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாதையன் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு  நிற்க்காமல் சென்ற 4 சக்கர வாகனத்தை தேடி வருகிறார்.

இதே போல கோவை புலிகுளம் அம்மன் குளம் அண்ணாநகரை சேர்ந்தவர் ராஜரத்தினம் (வயது 67) இவர் நேற்று சூலூர் பக்கம் உள்ள ரங்கநாதபுரம் இ.பி. அலுவலகம் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேன் இவர் மீது மோதியது. இதில் ராஜரத்தினம் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு  எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து அவரது மகன் ராஜ தீப் சூலூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வேன் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..