இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேரை வழிமறித்து பீர் பாட்டில் குத்து..!

கோவை அருகே உள்ள கோவில் மேடு தடாகம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தாமோதரன், இவரது மகன் கண்ணன் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தடாகம் ரோடு சிவகாமி நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் 2 பேர் பின் தொடர்ந்து வந்தனர். திடீரென்று அவரை வழிமறித்து தகாத வார்த்தைகளில் பேசி பீர் பாட்டிலால் குத்தினார்கள் .இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கண்ணன் கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் பைக்கில் தப்பி ஓடிய 2 ஆசாமிகளை தேடி வருகிறார்கள். இதேபோல கோவை சுந்தராபுரம், மாச்சம் பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சக்தி ( வயது 38 ) கூலி தொழிலாளி நேற்று இவர் அங்குள்ள ஆறுமுக கவுண்டர் வீதியில் நடந்து சென்றார் .அப்போது குடிபோதையில் ஒருவர் இவரை வழிமறித்து திட்டினார் .பின்னர் பீர் பாட்டிலை உடைத்து அவர் மீது குத்தினார் :இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து சுந்தராபுரம் போலீசில் சக்தி புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து சுந்தராபுரம் மாச்சம் பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் ( வயது (37) என்பவரை நேற்று கைது செய்தார் . இவர் அங்குள்ள இன்ஜினியரிங் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். இவர் மீது கொலை மிரட்டல், தாக்குதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.