திருவள்ளூர்நகராட்சி கமிஷனர் அதிரடி மாற்றம்…

மாவட்ட தலைநகரான திருவள்ளூர் நகராட்சி கமிஷனராக பணியாற்றி வந்தவர் சுரேந்திர ஷா இவர் மீது கணக்கில் அடங்காத குற்றச்சாட்டுகள் நிலவி வந்தன தனது வீட்டில் வளர்த்த நாய்களை குளிப்பாட்டவும் வாக்கிங் செல்ல அழைத்துச் செல்லவும் மலம் கழிக்க வெளியே அழைத்துச் செல்லவும் வேகவைத்த மாட்டிறைச்சிகளை பக்குவமாக போடவும் இதற்கென தனியாக மூன்று ஷிப்ட் தூய்மை பணியாளர்களை நகராட்சி செலவில் நியமித்திருந்தார் கடந்த கவுன்சில் கூட்டத்தில் இந்த விஷயம் ஆதாரத்துடன் பேசப்பட்டது ஒவ்வொரு நகராட்சியிலும் கமிஷனர் சுரேந்தர் ஷா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவி வந்ததால் தொடர்ந்து மாற்றப்பட்டு வந்திருந்தார் நகராட்சி நிர்வாகத்தில் இது என்ன தலைவலியாக போய்விட்டதே என்ற நிலையில் நாகப்பட்டினம் நகராட்சிக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார் சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் கமிஷனராக பணியாற்றி வந்த சுபாஷினி திருவள்ளூர் நகராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளார் இதை கேள்விப்பட்ட பொதுமக்கள் ஆனந்த கூத்தாடினர் கவுன்சிலர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்