தொண்டாமுத்தூர் சுடுகாட்டில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது..!

கோவை தொண்டாமுத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் நேற்று தொண்டாமுத்தூர் கிழக்கு வீதியில் உள்ள சுடுகாடு பின்புறம் ரோந்து சுற்றி வந்தார்.அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்துள்ளனர். அவர்களை துரத்தி பிடித்து கைது செய்தார். அவர்களிடம் 1050 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இவர்கள் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பகரூல்இஸ்லாம் ( வயது 28) அஸ்விக்குல் இஸ்லாம் ( வயது 27) என்பது தெரிய வந்தது.இவர்கள் தொண்டாமுத்தூர் பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தனர்.இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.