போட்டோ ஸ்டூடியோவின் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை..!

கோவை : கேரள மாநிலம் எர்ணாகுளம், உலியனூரைச் சேர்ந்தவர் அபு மோகராஜ் (வயது 34) இவர் ஆவராம் பாளையம் ரோடு, இளங்கோ நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் முதல் தளத்தில் ” இன்சைடு ஆப் டிஜிட்டல் மூவிஸ்” என்ற பெயரில் போட்டோஸ் டூடியோ நடத்தி வருகிறார் .கடந்த 7-ந் தேதி இவர் ஸ்டூடியோவை பூட்டிவிட்டு ஆனைகட்டிக்கு சென்று விட்டார். அப்போது யாரோ ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ஆப்பிள் கம்யூட்டர் ,சவுண்ட் சிஸ்டம் ஆடியோ ஹார்ட் டிஸ்க் போன்ற பொருட்களை திருடி’சென்று விட்டனர். இவைகளின் மொத்த மதிப்பு ரூ15 லட்சம் இருக்கும் .இது குறித்து அபு மோகராஜ் பீளமேடு போலீசில் புகார் செய்தார் சப் இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.