2 கல்லூரி மாணவர்களை காரில் கடத்தி தாக்குதல்- மர்ம கும்பலுக்கு வலைவீச்சு..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்பக்கம் உள்ள ரங்கசமுத்திரம், காந்தி வீதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் கோபிநாத் ( வயது 19)சின்னவேடம்பட்டி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம் பி ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது அண்ணன் நந்தகுமார் இவரும் அதே கல்லூரியில் எம். பி ,ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் சத்தியமங்கலத்தில் இருந்து தினமும் கல்லூரி பஸ்சில் கோவைக்கு வருவார்கள்.இவர்கள் இருவரும் நேற்று கல்லூரி முடிந்து வீடு செல்வதற்காக பஸ்சுக்காக சின்னவேடம்பட்டி ரோட்டில் கல்லூரி ஆர்ச் முன் நின்று கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த ஒரு கும்பல் இவர்களை கடத்திச் சென்று கிரநத்தம் ரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கினார்கள் .இதில் இருவரும் காயம் அடைந்தனர். சிகிச்சைக்காக அங்குள்ளர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து மாணவர் கோபிநாத் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் . போலீசார் மாணவர்கள் சஞ்சய், பைசல், ஸ்ரீராம் பன்னீர் மற்றும் சிலரை தேடி வருகிறார்கள். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது..