2 பைக்குகள் நேருக்கு நேர் மோதல் : தந்தை பலி – மகன் படுகாயம்..

கோவை அருகே உள்ள பேரூர் செட்டிபாளையம் அங்காளம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராயப்பன் (வயது 70 ) இவர் நேற்று தனது மகன் சதாசிவம் (வயது 32) என்பவருடன் பைக்கில் பச்சாபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பைக்கை ராயப்பன் ஓட்டினார். மகன் சதாசிவம் பின்னால் இருந்தார். அங்குள்ள ஆவின் பால் கம்பெனி அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு பைக் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் ராயப்பன் இறந்தார் .மகன் சதாசிவம் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து பேரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி விசாரணை நடத்தி பைக் ஓட்டி வந்த சீரநாயக்கன்பாளையம் பாரதியார் வீதியை சேர்ந்த பிரசாத் ( வயது 22) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..