மாநகராட்சி பொதுக் கழிப்பிடம் அருகே 161 கிலோ குட்கா பறிமுதல்- வட மாநில வாலிபர்கள் 2 பேர் கைது..!

மாநகராட்சி பொதுக் கழிப்பிடம் அருகே 161 கிலோ குட்கா பறிமுதல்- வட மாநில வாலிபர்கள் 2 பேர் கைது..! கோவை ஆர். எஸ். புரம், சிரியன் சர்ச் ரோடு பகுதியில் உள்ளமாநகராட்சி பொதுக் கழிப்பீடம் அருகே குட்கா பதுக்கி வைத்திருப்பதாக ஆர். எஸ். புரம் .போலீசுக்குநேற்று மாலை தகவல் வந்தது .உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் காசிபாண்டியன் ,சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் தடை செய்யப்பட்ட 161 கிலோ குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது,இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நபாராம் (வயது 26) தினேஷ் (வயது 24)ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் கோவை தாமஸ் வீதி, ஒப்பணக்கார வீதி பகுதியில் தங்கி இருந்து வட மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் குட்கா கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது,இந்த 2 பேர் மீதும் ஏற்கனவே குட்கா கடத்தல் வழக்குகள் உள்ளது.இருவரும் நீதிமன்றத்தில ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்