ஈரோடு கிழக்கு தொகுதியில் 1,430 வாக்கு இயந்திரங்கள் – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு..!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் 1,430 வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. 238 வாக்குசாவடிகளிலும் வாக்களிப்பதை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளது.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய விவிபிடி 310 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்கு சாவடியில் மட்டும் 1,260 தேர்தல் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி பேட்டியளித்துள்ளார்.