கோவை ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை முயற்சி..!

கோவை ஆர். எஸ் .புரம் , டி.வி.சாமி ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன் ஏ.டி.எம். சென்டர் உள்ளது. இரவில் இதன் கதவை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இது குறித்து தலைமை தபால் அதிகாரி மீனாட்சி (வயது 51)ஆர் எஸ் புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கொள்ளையர்கள் கதவை உடைக்கும் போது ஆள் நடமாட்டம் இருந்ததால் கொள்ளை நடக்கவில்லை. போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்து வருகிறார்கள்..