10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்- போக்சோவில் காதலன் கைது..!

கோவை துடியலூர் அருகே உள்ள கணுவாய் பகுதியில் வசிப்பவர் துரை. இவரது மகன் பாலாஜி ( வயது 22 )இவர்களது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் ,கடவனூர் ஏரிக்கரை ஆகும் .தற்போது இவர்கள் கணுவாய் பகுதியில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தனர் .இந்த நிலையில் இவர்கள் குடியிருக்கும் பகுதியில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் குடியிருந்தனர். அந்த குடும்பத்தைச் சேர்ந்த 10-ம்வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பாலாஜிக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அந்த மாணவியை பாலாஜி கடத்தி சென்று ஆசை வார்த்தை காட்டி திருமணம் செய்து கொண்டார். இதனால் அந்த மாணவி கர்ப்பமானார் .பின்னர் அந்த மாணவி பிரசவத்துக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது அந்த மாணவிக்கு 18 வயது ஆகாததால் துடியலூர் அனைத்து மகளீர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் அன்னம் விசாரணை மேற்கொண்டு குழந்தைகள் திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்து பாலாஜியை கைது செய்தார்.