105 கிலோ குட்கா பறிமுதல் – வியாபாரி கைது..!

105 கிலோ குட்கா பறிமுதல்.- வியாபாரி கைது..! கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள நம்பர் 10 முத்தூரில் வசிப்பவர் ஹரி ராமகிருஷ்ணன் ( வயது 44 )அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் தடை செய்யப்பட்டபுகையிலைப் பொருட்களை ( குட்கா ) விற்பனை செய்வதாககிணத்துக்கடவு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி. சப் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன்ஆகியோர் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பிளாஸ்டிக் சாக்கு முட்டைகளில் 105 கிலோ குட்காமறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ 1 லட்சத்து 76 ஆயிரம் இருக்கும், இதையடுத்து வியாபாரி ஹரி ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.