சிங்காநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு..!

கோவை சிங்காநல்லூர் அண்ணா நகர் அங்கம்மாள்லே – அவுட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவர் இறந்து விட்டார். இவரது மனைவி லட்சுமி ( வயது 54) தனது தாயுடன் வசித்து வருகிறார்.கடந்த 10ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு திண்டுக்கல் சென்று விட்டார் .நேற்று திரும்பி வந்தார்.அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து லட்சுமி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..