10 கிலோ கஞ்சா பறிமுதல் – வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது..!

கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்று சூலூர் பிரிவு பஸ் நிலையம் அருகே திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வட மாநில வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஒடிசாவை சேர்ந்த கங்கா பகா( வயது 30என்பது தெரிய வந்தது .கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதை ஒடிசாவில் இருந்து வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்வதாக விசாரணையில் தெரியவந்தது.

 

இதே போல பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமுல் பிரிவு போலீசார் நேற்று மலுமிச்சம்பட்டி- செட்டிபாளையம் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள்.அப்போது பைக்கில்  வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் அவரிடம் 5.5 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.கஞ்சாவும் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் புது டெல்லியை சேர்ந்த சோனு குமார் முகியா (வயது 28)என்பது தெரிய வந்தது.இவர் பீகார் மாநிலத்திலிருந்து கஞ்சா வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்தது தெரிய வந்தது.