கோவையில் 5 வீடுகளில் கொள்ளை கும்பல் கைவரிசை… தங்க வைர நகை -பணம் திருட்டு – மக்கள் பீதி..!

கோவையில் 5 வீடுகளில் கொள்ளை கும்பல் கைவரிசை… தங்க வைர நகை -பணம் திருட்டு – மக்கள் பீதி..! கோவை கணபதியில் உள்ள ராயப்பாலே அவுட்டை சேர்ந்தவர் ஸ்ரீஹரி ( வயது 27 )டிசைனர். இவர் பணியின் நிமித்தமாக பெங்களூர் சென்றார். இதனால் அவரது மனைவி நல்லாம் பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை ஸ்ரீஹரி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது .உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 வைர மோதிரம், கைக்கடிகாரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும். இது குறித்துஅவர் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். இதே போல அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அசோக்குமார் (வயது52) இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவை உடைத்து 2 பவுன் நகைகளை யாரோ திருடி சென்று விட்டனர்.மேலும் அதே அடுக்குமடி குடியிருப்பில் வசிப்பவர் டாக்டர் கிருஷ்ண குமார் . இவர் தனது மகள்களை பார்க்க குடும்பத்துடன் அமெரிக்க சென்றுள்ளார் .அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றுள்ளனர் . எவ்வளவு பணம் திருட்டு போனது? என்பது அவர் வந்த பிறகு தான் தெரியவரும். இதற்கு இடையில் அதே பகுதியில் ஸ்ரீ ராகவேந்திரா கேட் டிசைனிங் சென்டர் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் கீழ் தளத்தில் ஒருவர் மட்டும் வாடகைக்கு வசித்து வருகிறார். இந்த நிலையில் தனியார் நிறுவனம் மற்றும் கீழ் தளத்தில் உள்ள அறையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயற்சித்துள்ளனர். அதே பகுதியில் 5 இடங்களில் நடந்த தொடர் திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பொதுமக்களிடையேபெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இதையொட்டி அந்த பகுதியை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.