கத்தியை காட்டி மிரட்டி ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது..! 

கத்தியை காட்டி மிரட்டி ஆட்டோ டிரைவரிடம் பணம் பறித்த வாலிபர் கைது..!  கோவை கணபதி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ் (வயது 41) ஆட்டோ டிரைவர் .இவர் நேற்று சங்கனூர் ரோடு, அண்ணா நகர் ஆட்டோ ஸ்டாண்டு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் அவரிடம் மது குடிக்க பணம் கேட்டார் .அவர் கொடுக்க மறுத்ததால் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அவரது சட்டைபையிலிருந்து 500 ரூபாயை கொள்ளை அடித்து விட்டு தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து ஜேசுதாஸ் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காமராஜபுரம் சங்கனூர் மெயின் ரோட்டை சேர்ந்த சரவண வேல் என்பவரை நேற்று கைது செய்தனர்.இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.