ஈஷா யோகா மையத்தில் திருடிய இளைஞர் கைது..!

கோவை பூண்டி அருகே உள்ள ஈஷா யோகா மையத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருபவர் காளிதாஸ் ( வயது 46 ) இவர் நேற்று அங்குள்ள சூரிய குண்டம் மண்டபம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது தனது பையை அங்கு வைத்துவிட்டு பொது கழிப்பிடத்திற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அவரது பையில் இருந்த 2 ஆயிரம் ரூபாயை ஒரு ஆசாமி திருட்டினான். அவரை கையும் களமாக பிடித்து ஆலாந்துறை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் தல்லாகுளம் பக்கம் உள்ள செல்லுரை சேர்ந்த பாண்டியன் மகன் அஸ்வத் ( வயது 21) என்பது தெரியவந்தது. இவரிடம் விசாரணை நடந்து வருகிறது.