கோவை டாஸ்மாக் கடையில் திடீர் சோதனை: கேஷியர் கைது – 108 மதுபாட்டில்கள் பறிமுதல்.!!

கோவை தடாகம் ரோடு, கோவில் மேட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் (எண்16 25) கவுண்டம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப் இன்ஸ்பெக்டர் சந்திரமூர்த்தி ஆகியோர் நேற்று காலை 11 மணிக்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாக மது பாட்டில்களை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கேஷியரான கவுண்டம்பாளையம் அம்மன் நகரை சேர்ந்த நாகராஜ் ( வயது 38 ) கைது செய்யப்பட்டார். 108 மது பாட்டில்களும், மது விற்ற பணம் ரூ 33 ஆயிரத்து 650 பறிமுதல் செய்யப்பட்டது. ரமேஷ் குமார் ,பார் சூப்பர்வைசர் ராஜேஷ், விற்பனையாளர் குண்டன் ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.