கஞ்சா செடி பயிரிட்ட இளைஞர் கைது..!

கோவை சிவானந்தா காலனி, மாஸ்த்தி அம்மன் லேஅவுட் சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் கவுதம் ( வயது 19) இவர் மலுமிச்சம்பட்டி அன்பு நகரில் தங்கியுள்ளார். அங்குள்ள மதுரை வீரன் கோவில் அருகே கஞ்சா செடி பயிரிட்டு இருந்தாராம். இதை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். கஞ்சா செடி பறிமுதல் செய்யப்பட்டது..