கோவை டாஸ்மாக் கடைமுன் போலீசுக்கு கொலை மிரட்டல் – 2 பேர் கைது..!

கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐ.யாக பணி புரிந்து வருபவர்.திருச் செல்வன்.நேற்று இவரும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸ்காரர் சச்சின் என்பவரும் சங்கனூர் டாஸ்மாக் கடை ( எண் 1630 ) அருகே ரோந்துசுற்றி வந்தனர்.அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டு அந்த வழியாக சென்றவர்களிடம் தகராறு செய்து கொண்டிருந்த 2பேரை கண்டித்தனர். இதில் ஆத்திரமடைந்த அந்த 2 பேரும் சேர்ந்து போலீஸ்காரர் சச்சினை தாக்கி கீழே தள்ளினார்கள். சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் திருச்செல்வனையும் மிரட்டினார்களாம். இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் விரைந்து சென்று சிவானந்தா காலனி கந்தசாமி லே-அவுட்டை சேர்ந்த மணி (வயது 27) விஷ்ணு (வயது 23)ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாது தடுத்தல், உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.