மளிகை கடை எரிந்து நாசம், ரூ.6 லட்சம் சேதம் …

கோவை அருகே உள்ள வீரகேரளம் பெரிய தோட்டம் காலனியை சேர்ந்தவர் ஜான்ராஜ் ( வயது 54)இவர் வடவள்ளி, நியூ தென்றல் நகரில் மளிகை கடை நடத்தி வருகிறார்.கடந்த 24ஆம் தேதி இரவில் இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்,25 -ம் தேதி இரவு இவரது கடையில் இருந்து புகை வருவதாகபக்கத்தில் வசிக்கும் பாரதி என்பவர் இவருக்கு போன் செய்தார் .வந்து பார்த்தபோது கடை முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அதிலிருந்த ௹6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து ஜான்ராஜ் வடவள்ளி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.