அதன் ஒரு பகுதியாக ரூ.1,450 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சர்வதேச விமான நிலையத்தைப் பிரதமர் மோடி டிசம்பர் 30-ம் தேதி திறந்து வைத்தார். இந்த விமான நிலையத்தை சர்வதேச விமானநிலையமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில்,“புனிதமான ஶ்ரீராமரை, அயோத்தியை உலகம் முழுவதும் இணைக்க எங்கள் அரசு உறுதியாக இருக்கிறது. விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக அறிவித்து, மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம், அயோத்தி தாம் என அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கை நாடு முழுவதும் உள்ள எங்கள் குடும்ப உறுப்பினர்களின் சார்பாக மகரிஷி வால்மீகி-க்கு மரியாதைக்குரிய அஞ்சலி” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.