முன் விரோதத்தால் வாலிபருக்கு கத்திக்குத்து – தொழிலாளி கைது..!

கோவை போத்தனூர் சீனிவாசன் நகர் பக்கமுள்ள ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர்  முருகன் .இவரது மகன் தமிழரசன் (வயது 24)பாரம் தூக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று இவர் சுந்தராபுரம் ,கணேசபுரம் பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது போத்தனூர் கணேஷ்புரம் ராஜேஸ்வரி நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த் ( வயது 20 )அங்கு வந்தார். முன் விரோதம் காரணமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த் தமிழரசனை வயிற்றில் கத்தியால் குத்தினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து தமிழரசன் போத்தனூர் போலீசில் புகார் செய்தார் . போலீசார் ஸ்ரீகாந்த் கைது செய்தனர். இவர் மீது கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..