பெண் கழுத்தை நெரித்து கொலை: நகைக்காக கோவையில் நடந்த கொடூரம் – காவல்துறை விசாரணை!!!

பெண் கழுத்தை நெரித்து கொலை: நகைக்காக கோவையில் நடந்த கொடூரம் – காவல்துறை விசாரணை!!!

கோவை விளாங்குறிச்சி சேரன் மாநகர் பகுதியில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மனைவி ஜெகதீஸ்வரி (41), இவர்களது மகள் கார்த்திகா +2 படித்து வருகிறார். சக்கரவர்த்தி பெயிண்டிங் காண்ட்ராக்டராக தொழில் செய்து வருகிறார்.

மகள் கார்த்திகாவை பள்ளியில் இருந்து, ஜெகதீஸ்வரி தினமும் மாலை 4.30 மணியளவில் அழைத்துச் செல்வார். நேற்று 4.30 மணி ஆகியும் அவர் அழைத்துச் செல்ல வரவில்லை. கார்த்திகா 5.30 மணி வரை காத்து இருந்தும் தனது அம்மா வராததால், வீட்டிற்கு நடந்து வந்து உள்ளார். வீட்டின் படுக்கை அறையில் தனது தாயார் இறந்து கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கழுத்து நெறிக்கப்பட்டு ஜெகதீஸ்வரி இறந்து இருக்கலாம் எனவும், 4 சவரன் தங்க சங்கிலி மற்றும் ஒரு பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்து உள்ளது. பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் குறித்து ஜெகதீஸ்வரியின் கணவர் சக்கரவர்த்தி பேசும்போது:-

வெளியூரில் தங்கி வேலை செய்து வருவதாகவும், தன்னுடைய மகள் மாலை 6.30 மணிக்கு போன் செய்து அம்மா செத்துக்கிடப்பதாக தன்னிடம் தெரிவித்தார். மனைவி அணிந்திருந்த ஐந்து பவுன் செயின் மற்றும் ஒரு பவுன் கம்மல் திருடுபோயுள்ளதாக கூறினார்.