சைதாப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பார்மில் பெண் படுகொலை – தங்கை உட்பட 5 குற்றவாளிகள் கைது..!

 கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு எட்டு மணி அளவில் சென்னை ஆதம்பாக்கம் இந்திரா காந்தி நகர் புவனேஷ் இவரது மனைவி ராஜேஸ்வரி வயது 30 இவர் சைதாப்பேட்டை ரயில் நிலைய பிளாட்பார்மில் பழ வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்தில் மும்முரமாக இருந்த அவரை ஒரு கும்பல் வெட்டி சாய்த்தது .இது குறித்து மாம்பழம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து ராஜேஸ்வரியை ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்து போனார். தப்பி ஓடிய கும்பல் ராஜேஸ்வரியின் உடலில் வழிந்த ரத்தத்தை நெற்றியிலும் உடல் எங்கும் பூசிக்கொண்டு மச்சான் ராஜேஸ்வரியின் அட்டகாசம் ஓய்ந்து விட்டது என கத்திக் கொண்டே ஓடினர். இது குறித்து ரயில்வே போலீஸ் ஏ டி ஜி பி வனிதா குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டார். அதன் பேரில் ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு பொன் ராமு தலைமையில் டி எஸ் பி ரமேஷ் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் சப் இன்ஸ்பெக்டர்கள் ஹரிதாஸ் சிவகுரு மணிகண்டன் மற்றும் காவலர்கள் அடங்கிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் மாறுவேடத்தில் தீவிரமாக துப்பு துலக்கினர் .கொலையை யாருக்கும் பயப்படாமல் செய்த குற்றவாளிகள் 1.சக்தி என்கிற சக்திவேல் வயது 23 தகப்பனார் பெயர் வெங்கடேசன் மீனம்பாக்கம் சென்னை 2. ஜெகதீஷ் வயது 23 தகப்பனார் பெயர் செல்வராஜ் புழுதிவாக்கம் சென்னை 3. சூர்யா வயது 19 தகப்பனார் பெயர் ராஜேஷ் மடிப்பாக்கம் சென்னை4.ஜான்சன் வயது19 தகப்பனார் பெயர் ஏசுராஜ் ஜமீன் பல்லாவரம் சென்னை 5. நாகவல்லி வயது 23 கணவர் பெயர் முத்துக்குமார் கன்னிகாபுரம் திருநின்றவூர் சென்னை ஆகியோரை தனி போலீஸ் படையினர் சாமர்த்தியமாக மடக்கி பிடித்து கைது செய்தனர் கொலை செய்ய பயன்படுத்திய கத்திகள் கற்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. கொலை செய்யப்பட்ட  ராஜேஸ்வரிக்கும் குற்றவாளிகள் அனைவருக்கும் புறநகர் ரயில் நிலையங்களில் வியாபாரத்தில் அடிக்கடி மோதல் ஏற்படுமாம். இந்த மோதல் தான் கொலையில் முடிந்து விட்டது கைது செய்யப்பட்ட ஐந்து பேர் மீதும் ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என போலீசார் தெரிவித்தனர் . குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டனர்..