கோவையில் சரக்கு ஆட்டோ மோதி பெண் சாவு..!

கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி அன்பு நகர், அவுசிங் யூனிட்டில் வசிப்பவர் நவமணி. இவரது மனைவி பிரேமா (வயது 60) கோவையில் வீட்டு வேலை செய்து வந்தார். இவர் நேற்று ஆர் .எஸ் .புரம். மேற்கு சம்பந்தம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு ஆட்டோ இவர் மீது மோதியது .இதில் பிரேமா படுகாயம் அடைந்தார். இவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார். இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது.இன்ஸ்பெக்டர் சரோஜா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.இது தொடர்பாக உக்கடம் வைசியாள் வீதியைச் சேர்ந்த டிரைவர் முருகேசன் (வயது 57) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..