கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவி சித்ரவதை… கணவர் உள்பட 6 பேர் மீது வழக்குபதிவு ..!

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ராமானுஜம் நகர், காமராஜ் ரோட்டை சேர்ந்தவர் சாகுல் அமீது .இவரது மனைவி சதிகா (வயது 27) இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது .5 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் கணவர் சாகுல் அமீது மாமனார் முகமது இம்தியாஸ் ,சகோதரர் முகமது இப்ரான் மாமியார் சுல்தானி ,சோபியா அப்துல் ரகீம் ஆகியோர் மேலும் நகை- பணம் கேட்டு சதிகா வை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.இது குறித்து சதிகா கோவை கிழக்கு பகுதி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் கணவர் சாகுல் அமீது, மாமனார் முகம்மது இம்தியாஸ், சகோதரர் முகமது இப்ரான், மாமியார் சுல்தானி, அப்துல் ரகீம் ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி தாக்குதல், உட்பட 5 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..